திரைப்பார்வை..
மகன் விமல் பிறந்தது நாள்முதல் இன்றுவரை ஆன செலவுகளை பைசாவிடாது நோட்டு போட்டு எழுதும் அப்பா, மகன் சிவ கார்த்திகேயன் என்ன செய்தாலும் சத்தமில்லாது ஆமோதிப்புடன் நகர்ந்து செல்லும் (இந்த காலத்துலயும் இப்படி ஒரு அப்பனா?? ) அப்ப்ப்பா.. என்ற இரு நண்பர்களின் கதை.
”நம்ம ப்ளஸ்ஸே இந்த மைனஸ்ஸ ப்ளஸ்ஸாக்கறதுதான்” என்று ஆவூன்னா பாஸிட்டிவ் பன்ச் அடிக்கும் இந்த இரு நாயகர்களுக்கும் தலா ஒரு நாயகிகள் பிந்து மாதவி, விமலுக்கு ரெஜினா கஸ்ஸாண்ட்ரா,, (காசு எண்ணுறா இல்ல.. ) கழுகுல கண்ணை கொத்துன பிந்துவே இந்த படத்துல சுமாராதான் தெரியுறாங்க.. அப்ப சப்பின மாங்கொட்டை மாதிரி இருக்கும் இந்த புதுப்பொண்ணோட அப்பியரன்ஸ் பத்தி நோ அபிப்ராயம்.. மேட்டர் என்னன்னா கேமரா அந்தளவுக்கு மெனக்கெடல.
ரெண்டு ஹீரோக்களும் அப்பப்போ சப்பை மேட்டருக்கெல்லாம் அடிச்சிக்கிற நண்பர்கள். உள்ளூர் கட்சித்தலைவரோட கூட்டத்துக்கு கூட்டம் சேக்குற அல்லக்கை வேலை பாக்கும் இவுங்க ரெண்டு பேருக்கும் தங்களொட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னாடி இருக்கறது ஓட்டுக் கணக்குதான்.
விமல் அப்பாவோடு கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்து அப்பா நோட்டில் எழுதி வைத்திருக்கும் கணக்கை வட்டியின்றி செட்டில் பண்ணுவதாக சூளுரைத்து வந்து மீண்டும் கட்சி பணி அது இதுவென ஊர்சுற்றுகிறார். கடைசியில் கடனை அடைத்தாரா, காதலியை கைப்பிடித்தாரா என்பதுதான் கதை என்று சொல்விட்டு விட்டுவிட்டாலும் கதை கண்டமேனிக்கு திரிந்து அப்பா செண்டிமெண்ட்டோடு ஒரு வழியாக முடிகிறது.
இயக்குனர் பாண்டிராஜ் ஆரம்பத்திலேயே "நாங்கள் சமூகத்திற்கு எதுவும் கருத்து சொல்ல வரவில்லை, நீங்களாகவே எதுவாவது புரிந்துக்கொண்டால் கம்பேனி அதற்கு பொறுப்பேற்காது" என்று ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தால் சுதாரித்திருக்கலாம்.
எஸ்.எம்.எஸ் களை தொகுத்து அதற்கு காட்சிகளை உருவாக்கிய செயற்கைத்தனத்துடன் தொடங்கும் படம்.. பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் அதைவிட அதிகமான இடங்களில் கடுப்பு ரகமாய் திணிக்கப்பட்ட வசனமாய் துருத்திக்கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியும் ட்ராமா ஸ்டேஜ் போல் எப்போதும் ரயில்வே ஸ்டேஷனிலேயே தொடங்குவதால் மேடை நாடகம் பார்க்கிறோமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
தியேட்டரில் ஆங்காங்ககே மொக்கை ஜோக்குகளுக்கும் அதிரடியாக விடாமல் சிரிக்கும் உருப்படிகள் இருந்ததால், தியேட்டரே சிரிப்பதுபோல ஒரு மாயத்தோற்றம் எனக்கு இருந்ததென்னவோ உண்மைதான்.
நிஜமாகவே பல காட்சிகள் சிரிக்கும்படியாக இருந்தாலும், காட்சிகளின் கோர்வையில் பிசிறடிக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாது திடுமென தொடங்கும் காட்சிகள்தான் நம்மை கதை ரயிலில் ஏறவிடாமல் ப்ளாட்ஃபாரத்திலேயே இருத்திவிடுகின்றன.
விமல் குரலில் இன்னும் புதுக்கோட்டை பக்கத்து கிராமத்து வாசம், இவர் டைமிங்கில் சொதப்பினாலும், அங்கங்கே சிவ கார்த்திகேயன் மட்டப்பலகை வைத்து பூசிவிடுகிறார்.
(..மட்டப்பலகை என்ற உடன் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.. போன ’பரதேசி’ பதிவில் சொல்ல மறந்தது.. சமீப காலம் முன்புவரை, ஏன் இன்றும் சில இடங்களில கைகளால் தேயிலை பறிப்பவர்கள் பயன்படுத்திய ’மட்டக்குச்சி’ என்ற முக்கிய விடயத்தை எப்படி சேர்க்காமல் விட்டார் பாலா??. ஏனெனில் தேயிலை பறிப்பவர்கள் அந்தக் குச்சியின் மட்டத்திற்கு மேலுள்ள இலைகளைதான் பறிப்பார்கள்.. அது ஒரு குறிய்யீடு.. ஹும்ம்.. )
Over to KBKD Review..
வரவர பாண்டிராஜ் சேகர் போல ஆனார் (வி.சேகர் தான்.. ) அப்படின்னு அடுத்த படத்துல சொல்லிடலாம் போல.. காட்சிகள் உருவாக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பிந்து மாதவியின் அம்மா பாட்டி அம்மம்மா என அனைவரும் தத்தமது கணவன்மார்களை அடித்து புரட்டிய புர்ச்சிப் பெண்கள் என பிந்துவின் அப்பா விமலி(?) அண்ட் கோவிடம் கூச்சமின்றி குமுறும் காட்சி தியேட்டரில் அல்லோல கல்லோலப்படுகிறது.. அப்புறம் வழக்கம்போல் டாஸ்மாக் காட்சிகளும்தான்..
கதைப்படி விமல் அப்பா டெல்லி கணேஷ் மகனை கல்யாணம் செய்யச் சொல்லும் பெண் யாரென்று தெரியாமலே மறுத்து சண்டை போட்டுவிட்டுதான் வீட்டை வருகிறார். பெண் வீட்டாரிடம் அட்வான்ஸ் ஒரு லட்சம் வேறு வாங்கிவிட்டதாக வேறு டெல்லி கணேஷ் சொல்கிறார், ஆனால் அந்த பெண் தான் பிந்து என தெரியாது அவரையே காதலித்து அவரின் அப்பாவிடம் பெண் கேட்க செல்லும்போது அவர் விமலிடம் மகளை கல்யாணம் செய்து தர தட்சிணை கேட்கிறார். இது கொஞ்சம் குழப்பம்.. போதாக்குறைக்கு விமலுக்கு பிந்து தன் பள்ளி ஸ்நேகிதி என்ற திணிப்பு வேறு.. நல்லாச் சொல்லுறீங்கய்யா கதைய..
’கேடி’ ’கில்லாடி’ என்றவுடன் அவர்கள் பயங்கர மூளையுடன் எதாவது அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது செய்வார்கள் என்று நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.
தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான எடிட்டிங், அமெச்சூர்தனமான கேமரா என இதையெல்லாம் தவிர்த்து பார்த்தால் படம் நிச்சயம் ஒரு எண்டர்டெய்ன்மெண்ட்டுதான்.
பெரிய எதிர்பார்ப்பின்றி போனால் நிறைய சிரித்துவிட்டு வரலாம்..
நன்றி.
எஸ்.எம்.எஸ் களை தொகுத்து அதற்கு காட்சிகளை உருவாக்கிய செயற்கைத்தனத்துடன் தொடங்கும் படம்.. பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் அதைவிட அதிகமான இடங்களில் கடுப்பு ரகமாய் திணிக்கப்பட்ட வசனமாய் துருத்திக்கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியும் ட்ராமா ஸ்டேஜ் போல் எப்போதும் ரயில்வே ஸ்டேஷனிலேயே தொடங்குவதால் மேடை நாடகம் பார்க்கிறோமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
தியேட்டரில் ஆங்காங்ககே மொக்கை ஜோக்குகளுக்கும் அதிரடியாக விடாமல் சிரிக்கும் உருப்படிகள் இருந்ததால், தியேட்டரே சிரிப்பதுபோல ஒரு மாயத்தோற்றம் எனக்கு இருந்ததென்னவோ உண்மைதான்.
நிஜமாகவே பல காட்சிகள் சிரிக்கும்படியாக இருந்தாலும், காட்சிகளின் கோர்வையில் பிசிறடிக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாது திடுமென தொடங்கும் காட்சிகள்தான் நம்மை கதை ரயிலில் ஏறவிடாமல் ப்ளாட்ஃபாரத்திலேயே இருத்திவிடுகின்றன.
விமல் குரலில் இன்னும் புதுக்கோட்டை பக்கத்து கிராமத்து வாசம், இவர் டைமிங்கில் சொதப்பினாலும், அங்கங்கே சிவ கார்த்திகேயன் மட்டப்பலகை வைத்து பூசிவிடுகிறார்.
(..மட்டப்பலகை என்ற உடன் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.. போன ’பரதேசி’ பதிவில் சொல்ல மறந்தது.. சமீப காலம் முன்புவரை, ஏன் இன்றும் சில இடங்களில கைகளால் தேயிலை பறிப்பவர்கள் பயன்படுத்திய ’மட்டக்குச்சி’ என்ற முக்கிய விடயத்தை எப்படி சேர்க்காமல் விட்டார் பாலா??. ஏனெனில் தேயிலை பறிப்பவர்கள் அந்தக் குச்சியின் மட்டத்திற்கு மேலுள்ள இலைகளைதான் பறிப்பார்கள்.. அது ஒரு குறிய்யீடு.. ஹும்ம்.. )
Over to KBKD Review..
வரவர பாண்டிராஜ் சேகர் போல ஆனார் (வி.சேகர் தான்.. ) அப்படின்னு அடுத்த படத்துல சொல்லிடலாம் போல.. காட்சிகள் உருவாக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பிந்து மாதவியின் அம்மா பாட்டி அம்மம்மா என அனைவரும் தத்தமது கணவன்மார்களை அடித்து புரட்டிய புர்ச்சிப் பெண்கள் என பிந்துவின் அப்பா விமலி(?) அண்ட் கோவிடம் கூச்சமின்றி குமுறும் காட்சி தியேட்டரில் அல்லோல கல்லோலப்படுகிறது.. அப்புறம் வழக்கம்போல் டாஸ்மாக் காட்சிகளும்தான்..
கதைப்படி விமல் அப்பா டெல்லி கணேஷ் மகனை கல்யாணம் செய்யச் சொல்லும் பெண் யாரென்று தெரியாமலே மறுத்து சண்டை போட்டுவிட்டுதான் வீட்டை வருகிறார். பெண் வீட்டாரிடம் அட்வான்ஸ் ஒரு லட்சம் வேறு வாங்கிவிட்டதாக வேறு டெல்லி கணேஷ் சொல்கிறார், ஆனால் அந்த பெண் தான் பிந்து என தெரியாது அவரையே காதலித்து அவரின் அப்பாவிடம் பெண் கேட்க செல்லும்போது அவர் விமலிடம் மகளை கல்யாணம் செய்து தர தட்சிணை கேட்கிறார். இது கொஞ்சம் குழப்பம்.. போதாக்குறைக்கு விமலுக்கு பிந்து தன் பள்ளி ஸ்நேகிதி என்ற திணிப்பு வேறு.. நல்லாச் சொல்லுறீங்கய்யா கதைய..
’கேடி’ ’கில்லாடி’ என்றவுடன் அவர்கள் பயங்கர மூளையுடன் எதாவது அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது செய்வார்கள் என்று நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.
தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான எடிட்டிங், அமெச்சூர்தனமான கேமரா என இதையெல்லாம் தவிர்த்து பார்த்தால் படம் நிச்சயம் ஒரு எண்டர்டெய்ன்மெண்ட்டுதான்.
பெரிய எதிர்பார்ப்பின்றி போனால் நிறைய சிரித்துவிட்டு வரலாம்..
நன்றி.