புலிவால் - திரைப்பார்வை
திருமணம் வேறு
(இனியா) பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்ட ’ப்ளேபாய்’ ப்ரஸன்னா தன் அலுவலக பெண்ணுடன் (ஓவியா)
நடத்திய காமக் களியாட்டத்தை ஐ ஃபோனில் மொபைலில் பதிவு செய்திட.. அது ஒரு அசந்தர்ப்பவசத்தில்
விமலின் கையில் கிடைக்கிறது. அந்த ஆப்பிள் ஃபோனின் மீதான ’முன்’ ‘பின்’ அனுபவமில்லாத
விமல் அதை திரும்ப கொடுத்தாரா இல்லையா என்பதே பின் மீதிக்கதை.
2011ல் வெளியான
மலையாள படத்தை தட்டி நகாசு வேலை பார்த்து இன்றைய ட்ரெண்டுக்கு மாற்றிய இயக்குனர் திரைக்கதை
போக்கின் வலுவினையும் கவனத்தில் கொண்டிருக்கலாம்!. முன்பாதி முழுக்க இரண்டு ஹீரோக்களின் சுவாரஸ்யம் இல்லாத வழக்கமான காதல் காட்சிகள்.. திணிக்கப்பட்ட
இரு டூயட்டுகள் என ஸ்லோமோஷனில் கிளம்பும் கதை செல்ஃபோனை தொலைத்தவுடன் வேகம் பிடித்த பம்பரமாய் கிளம்பி அப்புறம் மையம்
கொண்டு ஒரே இடத்தில் சுற்றி.. நம்மை சோதிக்கிறது. ’கானாங்குருவி’ அழகு பாடலுக்கு அரதப்பழசான
நடன அசைவு அதிலும் விமலின் ’ஸ்பெஷல்’ மூவ்மெண்ட்டுகள் சலிப்புடன் ’உச்’சுக்கொட்ட வைக்கிறது.
இயக்குனர் ஜி.மாரிமுத்து
அவர்களின் முந்தைய படத்துடன் ஒப்பிடுகையில் இதில் ஸ்டைலிஷ்ஷான மேக்கிங்கிலும், அழகான
கேமரா கோணங்களுக்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். வெட்டல் ஒட்டல் செய்த அஸோஸியேட்
எடிட்டர் மப்பு ஜோதி ப்ரகாஷ் (கிஷோரின் அஸிஸ்டெண்ட்) எனது ரூம் மேட் என்பதால் அதை பெருமைப்படுத்தி
சொல்வதற்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது! J
ஒருபுறம் ப்ரஸன்னா
தனது கேரக்டரை சிறப்புற செய்து படத்தை நகர்த்துகையில் விமல் தன் சோகை விழுந்த நடிப்பை
பயன்’படுத்தி’ கதையின் அஸ்திவாரத்தை வாருவதுடன் நம்மையும் படுத்தியெடுக்கிறார். இந்த
மண்டு கேரக்டருக்கு இயல்பாகவே இவர்தான் பொருந்தி போவார் என்ற இயக்குனரின் கணக்கில்
கணிசமான டேமேஜ்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
ரசிகர்களை தவறிக்கூட
மூளையை பயன்படுத்த வைக்காத திரைக்கதை என்பதால் சுவாரஸ்யம் எந்த அளவிற்கு இருந்திருக்கும்
என்பதை சொல்லவும் வேண்டுமா?.
விமல் வேலை பார்க்கும்
டிபார்மெண்ட் ஸ்டோர் களம், விமலின் காதலி அனன்யா, சூரி, மற்றும் டார்ச்சர் மேனெஜர்
தம்பி ராமைய்யா என அனைவருமே ’அங்காடித்தெரு’வின் EXTENSION’ல் வாழ்கிறார்கள்.
மைய
கதை செல்ஃபோன் சார்ந்து இருப்பதால் சூரியின் காமெடி பக்கங்களை SMS ஜோக்குகள் வைத்து
செய்ய நினைத்தது நல்ல ஐடியாதான் என்றாலும் சில இடங்களில் ஒட்ட வைத்த கலர் காகிதங்களாக
கண்ணை உறுத்துகின்றன.
திருப்புமுனைகள்
இல்லாத திரைக்கதை மட்டுமே படத்தின் ஆகப்பெரிய்ய்ய பலவீனம். மற்றவிஷயங்களில் படம் ஓகே
ரகம்தான்.