Wednesday, March 20, 2013

பரதேசி - சைக்கோவின் சந்துச்சுவர் கிறுக்கல்கள்..


சமர்ப்பணம்!. 

ஒரு தலைமுறை பட்ட அவலங்களையும் கஷ்டங்களையும் பிரதானமாக சொல்லாது, அதிலிருக்கும் அசிங்கங்களை மட்டுமே அடுத்த  தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதற்கு, இந்த வெகுஜன ஊடகமான சினிமாவை பயன்படுத்திய பாலா மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு..

*****



 முதலில், இந்த பதிவிற்கு இந்த படத்தின் போட்டோக்களையே பயன்படுத்தக்கூட அருவருக்கும் மனநிலையில் இருக்கிறேனே  என்ற குற்ற உணர்ச்சியுடன் தொடங்குகின்றேன்


 உங்களில் பலர் கொண்டாடுவது போல்பாலாஎன்பவர் யதார்த்த சினிமாவின் பிதாமகனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..  ஆனால் அதற்கான முழுத்தகுதியும் இருக்கிறதா என்பதில் எனக்கு பெருத்த சந்தேகம் இன்னமும் இருக்கிறது.  
நல்லவேளை அவன் இவனில்உவ்வேசொல்லும்படியான வசனங்களும் காட்சிகளும் கொடுத்த அருவருப்பினை மறந்து அவரின் நல்ல படங்களின் பாதிப்பை மட்டுமே சுமந்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்னை SSR பங்கஜத்தில்.. 


பலருக்கும் கதை இந்நேரம் தெரிந்திருக்கும்படியாதலால் அதனை சுருங்கச் சொல்லிவிடுகிறேன். 1939வாக்கில் சாலூர் என்கிற கிராமத்தில் இருந்து வறுமையில் உழலும் மக்கள் கங்காணி ஒருவனின் வார்த்தைகளை நம்பி நெடுந்தொலைவு கடந்து  ’பச்சைமலைதேயிலை (வால்பாறை அருகில் நான்கு கி.மீ உள்ள) தோட்டத்திற்கு செல்கிறார்கள்அங்கு அவர்கள் படும் கஷ்டங்களும் அதிலிருந்து மீண்டனரா என்பது பின்பாதி பதிவு

இந்த படம் ஒரு சிறந்த முயற்சி.. மட்டுமல்ல கலைஞர்களின் குறிப்பாக அதர்வாவின் பாட்டியாக நடித்தவர் போன்ற அருமையான நெஞ்சில்  பதிந்து தடம் பதிக்கும் பாத்திரங்களும் கணிசமானோர் படத்தில் உண்டு!!


ஆனால் மொத்த படமும் பார்த்து முடிக்கையில் கனத்த மனதுடன் தியேட்டரை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது.. ”பார்.. முழுதும் சைக்கோவாகிப்பொன பாலாவைப் பார்!!” என்று அசரீரி எனக்குள் இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கிறது.  

போதாக்குறைக்கு அவர் வியாபார தந்திரத்துடன் வெளியிட்ட ரியாலிட்டி டீஸரின் கடைசியில் அவர் அடிவாங்கிய ஆர்ட்டிஸ்டுகளின் நடிப்பில் திருப்தியாகி வக்ரத்துடன் புன்னகைக்கும் ஸ்டில்லும் என் கண்முன்னே 360 டிகிரியில் வட்டமடிக்கின்றன



சாலூர் கிராமத்தில் வாழும் மக்கள் என்ன பிரிவினர்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்று பார்க்கும் இன்றைய தலைமுறையினர்க்கு புரியவைக்க வேண்டும் என கொஞ்சம்கூட மெனக்கெடவில்லை. வட்டு மயிர்களோடு அலையும் ஆண்களை வைத்து நாமே நமக்கு இருக்கும் அரைகுறை அறிவின் மூலம் அவர்களின் சமூகவியல் கஷ்டங்களை  அனுமானித்துக் கொள்ளவேண்டும் போல.. 


படத்தின் முக்கிய பாத்திரமானஒட்டுப்பொறுக்கி ()  ’_சுப்பொறுக்கி’ மட்டுமே படத்தில் தண்டோரா அடித்து தகவல் சொல்லும் வேலைப்பார்க்கிறார். மற்றவர்கள் என்ன வேலை அய்யா செய்கிறார்கள்??  (நான் இரண்டாவதாக சொன்னதைப் போன்ற நாற்றமடிக்கும் பெயர் பதிவுகள் பாலாவின் ட்ரேட்மார்க்காக ஆகிவிட்டதுதான் வேதனை..)  இதையெல்லாம் விளக்கமாகச் சொல்ல இரண்டு காட்சிகள் போதுமே?!  (நல்ல படைப்பாளிக்கு!!). 


நான் வெகுவாக ரசித்த நாஞ்சில் நாடனின்இடாலக்குடி ராசாகதை இங்கு முதல் பாதியில் பிணைக்கப்பட்டு  நாம் மனதில் உருவகப் படுத்தியிருந்த பாத்திரம் நம் கண் முன்னேயே பழைய இரும்புக்கடையில் நசுக்கப் படும் ஈய பாத்திரம் போல தட்டையாகி விடுகிறது.


அடுத்து  நாயகி வேதிகாவின் அங்க அசைவுகளும் நடன செய்கைகளும் கடுப்பு ரகம். ஒருவேளை வேதிகாடைம் மிஷின்ல் ஏறிவந்து பாலா படங்கள் பார்த்திருப்பார் போல!! .  போதாக்குறைக்கு அரைலூசு கதாநாயகனை அந்த முழு லூசு இழுத்துச் சென்று காட்டுக் குடிசையில் வைத்து கற்பழிக்க வேறு (??) செய்கிறது

எல்லா படங்களிலும் நாயகியை லூஸுப்பெண்ணாகவே (அது கதைக்கு தேவையே படவில்லை என்றாலும்கூட..) வர்ணிப்பது என்ன வகையான மனநோய்??!!!. அம்மணி  ஓவர் ஆக்டிங். இதற்கும் இயக்குனரே பொறுப்பேற்க வேண்டும்


ஜாலியாகத்தானே மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே.. திடீர் ஞானத்துடன் பக்கத்து ஊருக்கு வேலைக்கு செல்லும்ஒட்டுப்பொறுக்கிஅதர்வா.. செய்த வேலைக்கு கூலியை கேட்டு அடி உதைப்பட்டு அழுகிறார். தாழ்த்தப்பட்டவர்கள் வேலை செய்தால் அந்த காலத்தில் கூலி கொடுக்க மாட்டார்கள் போல!!. அப்போது வந்து சேரும் கங்காணி ஊருக்குள் வந்து  மக்களிடம் பணத்தைக் காட்டி எஸ்டேட் வேலைக்கு அழைக்கிறார்


சாலூர் கிராம மக்களும் பணத்தாசையில் மயங்கி.. பல ஜென்மங்களாக அடிமையாக வாழப் பழகிக்கொண்ட மனநிலையுடன் அடுத்த நாளே கிளம்பிச்செல்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண்ணைவிட்டு புலம் பெயர ஆதார காரணியாக  பணத்தாசை ஒன்று போதுமா??. ஆமாம் எனில் அந்த மக்கள் பட்ட கஷ்டங்கள் அதற்குண்டான  தண்டனை என்று கொள்ளலாமா??. 


பெருங்கூட்டமாக இடம் பெயர்ந்து தமிழ் நாட்டின் இன்னொரு மூலைக்கு அவர்கள் 48 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்ஒரு நாளைக்கு சராசரியாக நாற்பது கி.மீ என்று வைத்துக்கொண்டாலும்கூட 1600 கி.மீ.. பாலா சார் அவர்களை அஸ்ஸாமுக்கே கூட்டி சென்று இருக்கலாம்.  


ஒரே பொட்டல் வெளிப்பயணம்.. இதுவே ஒரு அபத்தம்!!   போகிற வழியில்  அவர்களில் ஒருவர் இறக்கும் தருவாயில் சோர்ந்து விழ.. எதோ கந்தல் துணி விழுந்து விட்டது போல் அவரை அப்படியே போட்டுவிட்டுப் போகிறார்கள்..  அவரும் கஷ்டப்பட்டு கையை அசைத்து அழைக்க.. அந்த கையை மட்டும் க்ளோஸப்பில் காட்டி அனுதாபம் தேடும் அசல் சினிமாத்தனத்தை பிரதிபலித்திருக்கிறார்என்னைப் பொறுத்தவரை கதையின் நாடி அந்த ஜீவனோடு  அந்த காட்சியிலேயே செத்துவிட்டது


அவர்கள் போய் சேருவதாக சொல்லப்படும் பச்சை மலை எஸ்டேட்டில் 1917 களிலேயே TATA நிறுவனம் தனது ப்ளாண்ட்டேஷன்களை துவங்கி  பணியாளர்களுக்கு முறையான திட்டமிடப்பட்ட சம்பள விகிதங்களை கடைபிடித்தது என்பது உபரித்தகவல்


கடும் வெயிலில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து பழகிய இனம் ஆனைமலை தொடரின் குளிருக்கு தங்களை வழக்கப்படுத்திக் கொள்ள என்ன பாடுபட்டிருக்கும்?. இதை உணரவேண்டுமானால் திடுமென ஒரு நாள் போட்டிருக்கும் சட்டையுடன் ஊட்டிவரை போய்வாருங்கள். அப்போது உணரலாம் அந்த கஷ்டங்களை!. 

ஆங்கிலேயர்கள் கொடுங்கோலர்களாகவே சித்தரிக்கப் பட்டாலும் அதில் பல நல்லவர்களும் இருந்தனர் என்பதனை பாலா மறந்தும்கூட சொல்லவில்லை என்பது  வருத்தமே (உதாரணமாக படத்தின் மூலக்கதையின் (ரெட் டீ ) ஆசிரியர்  பி.ஹெச்.டானியல் போன்றோர்கள.. ரெட் டீ நாவலின் ஆசிரியர் பி.ஹெச்.டானியல் போன்றவர்களால்தான் பல நல்லதுகள் நிகழ்ந்தன என்பது வரலாறு. மேலும்  Carwer Marsh போன்றவர்கள் மக்களிடையே நல்ல புரிந்துணர்வுடன் பழகி நன்மதிப்பை பெற்றனர். எந்த அளவிற்கென்றால், இவர் நிர்மாணித்த கவரக்கல் எஸ்ட்டேட்டில் இவருக்கு நினவுச்சிலை அமைக்கப் படுமளவிற்கு!!  

 ( மதராஸ பட்டினம், காலாபானி, நாடோடிதென்றல் போன்ற படங்கள் அதை சொல்லியிருக்கின்றனவே என்று நினைத்து பாலா விட்டுவிட்டார் போல..)


இன்னும் சொல்வதானால் 1920களில் ஆங்கிலேயர்களால்  கட்டப்பட்ட தேயிலை தொழிலாளர்கள் குடியிருப்புகள் படத்தில் காட்டப்படுவதுபோல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கவில்லை. இன்றும் அவை புழக்கத்தில் இருப்பது நிகழ்காலச் சான்று. மலை சாதியினர் மட்டுமே தங்களை வெளிக்கொணர மறுத்து இயல்பு மாறாமல் வாழ்ந்தனர் என்பதுதான் உண்மை


இங்கிலாந்தில் இருக்கும் தங்கள் கம்பெனிகளுக்கு லாபம்  ஈட்ட கடுமையாக வேலை வாங்கினார்கள் என்பதும் அதை ஏவலாக ஏற்றுக்கொண்டு கங்காணிகளும் பிழைப்பு நடத்தினார்கள் என்பதும் மட்டுமே படத்தில் சொல்லப்பட்டது போல உண்மை


எல்லாவற்றிற்கும் மேலாக, அற்றைய நாட்களிலேயேஅஸ்ஸாம்’ல் இருந்தது போன்ற ”Wage System"  இங்கேயும் பல இடங்களில் அமலில் இருந்தன என்பது பதிவுகளில் உள்ளதுநான் எதற்கும் ஒருமுறை பச்சை மலை எஸ்டேட்டிற்கு ஒரு பயணம் மேற்கொண்டு வரலாம் என இருக்கிறேன்.  


இந்த ஆவணப்படத்தில் எதற்காக எதிர்க்க திராணியின்றி தன் மனைவியையே விட்டுக்கொடுக்கும் ஒரு கையாலாகாதவனின் வரலாறு?.   ஒரு தலைமுறையின் வடுக்களையோ வீரத்தினையோ சொல்லமுனையும் படம் மட்டுமே ஒரு நல்ல ஆவணப் பதிவாக இருக்க முடியும். அதை விடுத்து அதன் அழகான பக்கங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அச்சு மையினை திரட்டி எடுத்து இன்று வாழும் அவர்களின் சந்ததியினர் முகத்தில் அறைந்து அப்பிவிடும் காரியத்தை பாலா போன்ற குரூர க்ரியேட்டர்களால் மட்டுமே தர இயலும்!


வழக்கமான பாலா பட நாயகன் போல அதர்வாவும் கங்காணியை மலைவெளிகளில் உருட்டி.. மிதித்து.. சவட்டி... எடுத்து கொடூரமாக கொல்லவில்லை என்பது மட்டுமே உச்சப்பட்ச ஆறுதல்!!


மளிகை கடை வைத்து ஏமாற்றும் முஸ்லிம் பாய், மந்திரித்த தாயத்துகளை விற்கும் போலிபூசாரி (இவர் அதர்வாவிற்கு தாயத்தினை எங்கு கட்டவேண்டுமென ஆத்தா மகமாயியிடம் கூவுவது நரகளை மிதித்த அனுபவத்தை தருகிறது.,) அடுத்து, மருத்துவர் என்ற போர்வையில் கிறிஸ்தவத்தை பரப்பும் டாக்டர் என்பது போன்ற தேசிய ஒருமைப்பாடுகளும் படத்தில் உண்டு நியா…….யமாரே!! அதிலும் டாக்டரும் அவரது இங்கிலீஷ் மனைவியும் அடிக்கும் குத்தாட்டக் கூத்து பாலா படங்களுக்கான கேவல அடையாளங்கள்!


பின்னணி இசை மற்றும் இதர டெக்னிக்கல் சமாச்சாரங்களை குறித்து பேச இது சமயமல்ல என்று நினைக்கிறேன். ஆனால் இந்த பூஞ்சை பூத்தாற்போன்ற கல்ர் டோன் எதற்கு என்றுதான் எனக்கு இன்னமும் விளங்கவில்லை, அந்த அரைவட்டு மயிர் வெட்டைப் போலவே..   

இன்னும் என்னென்னவோ எழுத நினைக்கிறேன்.. ப்ச்.. ஆற்றாமை என்னை தடுக்கிறது.


அப்பாவி தியேட்டர் ரசிகன்..

கணேஷ் நாராயணஸ்வாமி

குறிப்பு: பின்னூட்டங்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்!! ம்.. ஸ்டார்ட் மூஜிக்..

6 comments:

  1. அருமையான விமர்சனம். நானும் படம் பார்த்திருந்தால் இதே போல் தான் எழுதியிருப்பேன். நான் பாலா ரசிகை அல்ல. அவர் சோகத்தை மட்டுமே தூக்கி வைத்து ஸ்கோர் பண்ணப் பார்க்கிறார். எனக்கு அது பிடிப்பதில்லை. மேலும் பெண்களை சரியாகக் காட்டுவதில்லை. அதற்காகத் திறமை இல்லை என்று சொல்ல மாட்டேன். திறமையுள்ள புத்திசாலி தான். அவர் டைப் எனக்கு ரசிப்பதில்லை.

    நீங்கள் பார்த்து விமர்சனம் எழுதியதற்கு நன்றி :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் படத்தை பாருங்கள்.. என் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்த்திடுதல்தானே நியாயம்..

      Delete
  2. அருமையான விமர்சனம். நானும் படம் பார்த்திருந்தால் இதே போல் தான் எழுதியிருப்பேன். நான் பாலா ரசிகை அல்ல. அவர் சோகத்தை மட்டுமே தூக்கி வைத்து ஸ்கோர் பண்ணப் பார்க்கிறார். எனக்கு அது பிடிப்பதில்லை. மேலும் பெண்களை சரியாகக் காட்டுவதில்லை. அதற்காகத் திறமை இல்லை என்று சொல்ல மாட்டேன். அவர் டைப் எனக்கு ரசிப்பதில்லை.

    I am re-using Sushima's comments ...views are exactly the same ... Paradesi sucks :-( @sweetsudha1

    ReplyDelete
    Replies
    1. உண்மை மாமி.. நீங்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் இருந்ததே.. நான் ஓரளவிற்கு சரியாய் செய்திருக்கிறேன் என நினைக்கச் செய்கிறது

      Delete
  3. ஹேட்ஸ் ஆஃப் மாப்ளை..! ஒரு படத்தை மேம்போக்காக பாத்துட்டு புடிச்சது புடிக்காத எழுதிட்டு போகாம...இந்த படம் ஒரு சினிமாவா உண்டுபண்ண தாக்கத்த பாதிப்ப ரொம்ப அருமைய அலசிருக்க. ஒரு விமர்சகர்..எழுத போகும் வரிக்கு ரெஸ்பான்சிபிள் எடுக்கனும்..நீ தாராளமா எடுக்கலாம். தவறான தகவல் வரலாறா..இந்த தலைமுறைக்கு கொடுக்கும் போது, உனக்கு எழும் இயல்பான கோபம் ஆச்சர்யமா இருக்கு. இருந்தாலும் உனக்கு இம்புட்டு கோபம் ஆகாது..! கட்ட தொர!

    ReplyDelete
  4. நன்றி மாம்ஸு.. இம்மக்கள் தலையில் வைத்து கொண்டாடுமளவிற்கு இப்படம் பெரிய நியாயம் செய்துவிடவில்லை என கருதுகிறேன்..

    ReplyDelete