Sunday, August 15, 2010

குடைக்குள் தேவதை,,

ஒரு மழை நாளில்
களங்கமில்லா அன்பையே
பரவசம் என்றுணர்த்துவதற்கு
என் பள்ளிக்கும் ஒரு குட்டி தேவதை
பிரவேசித்தது - உங்களுக்கு நேர்ந்ததைப்போலே....

ஒவ்வொரு விடுமுறை நாளிலும் மறந்திடுவேன் அவளை....

அடுத்த பள்ளி நாட்களில்
மறுமுறை அவளை பார்த்திடும்போது
மீண்டும் அந்த பரவசம்...
இதில் இடைவெளி ஏனென்று யோசித்து
நிரப்பிட நினைத்திடாத
என் குழந்தை கணங்கள் இனித்தது எனக்கும் - உங்களைப்போலவே....

ஆனால் பின்னொரு பிரிவின் பின்னர்
அந்த தேவதை வரவே இல்லை...

தந்தைக்கு பணிமாற்றமென்று...
பின்னாளில் யாரோ சொன்னார்கள்.

மீண்டும் அந்த தேவதைப்பரவசம்
கிடைக்கும் என்று
என் காத்திருத்தல் தொடர்கிறது
இன்று வரையில் - உங்களைப்போலவே.

No comments:

Post a Comment