Wednesday, August 15, 2012

அட்டைக்கத்தி -ஒரு மொன்னைப் பார்வை


         மதுபானக்கடையின் ஹேங் ஒவர்  தீரும் முன்னர்  ’ஒரு படம் பார்த்துவிடலாமே’ என்ற யோசனை உச்சிவெயில் நேரத்திலேயே ஊற்றெடுக்க, மாலை  தனிக்குழு கூட்டி அப்புறம் தனியாக  நிற்கிறோமே என்ற ஞானம் ஊற்றெடுக்க நேராக போய் நின்ற இடம்.. கோவை கே.ஜி.. ஸ்க்ரீன் 3.

பல நாட்களுக்கு பின்னர் நமக்கிருக்கும் ரிலையன்ஸ்* அலர்ஜியை சட்டை செய்யாது இந்த முறை தியேட்டருக்குள் நுழைந்தால், இருக்கைகள் பல இரு கைகளையும் இழந்து எண்ணை தலைகள் உரசிய
அட்டுடலுடன் காட்சியளித்தன. வெளிய என்னதான்  செக்யூரிட்டி பில்டப் கொடுத்தாலும்.. உள்ளே உரல்லதான் இடிச்சிகிட்டு இருக்கிறார்கள் பில்டப் பெருமாள்கள். (* ரிலையன்ஸ் எடுத்த புதுசுல இவங்க போட்ட ஆட்டம்.. சாமீ.. )

ஒரு வழியாக சரியான நேரத்திற்கு சற்று பின்னர் படம் துவங்கியது.

2000மாவது ஆண்டில் (கி.பி லதான்..) கதை துவங்குகிறதே அதனால் ஏதேனும் ஸ்பெஷலாக இருக்குமோ என்று கண்ணை உருட்டி எதையும் தேடவேண்டாம்.. கொஞ்சம் பழய அட்மாஸ்பியர் அவ்வளவே.

அச்சு அசலாக, அந்த நாட்களில் சென்னையின் அசலூராக இருந்து, இன்று ரியல் எஸ்டேட்  , க்களால் மத்திய சென்னைக்கு வெகு அருகில் சுமார் அறுபது கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமம்..

அங்கிருந்து தினமும் அட்டெம்ட்டுக்கு டுடோரியல் போகிறேன் என்று ’’காட்சி’’  கொடுத்துவிட்டு பஸ்ஸில் கிளம்பி  கண்ணில் கிடைக்கும் சுமாரான பெண்களை எல்லாம் காதல் வலைக்குள் வீழ்த்த பிரயத்தனம் செய்யும் சுமாரான இளைஞன் தினகரன். கடைசிவரை அவர் டுடோரியலை கண்ணில் காட்டாதது ஒரு ஆறுதல்.  கிளிஷேக்கள் தவிர்ப்பிற்காக இருக்கலாம். (புதுமுகம் தினேஷ் - நடிப்பில் அறிமுகம் என்பது கொஞ்சம்
ஆச்சரியம்தான். தம்பி நல்லா வருவே.. போகும்போது ஒரு டீ சொல்லிட்டு போ!)

எல்லா விஷயங்களிலும் ஓவர் பீலா.. கொஞ்சம் புருடா என கையாளும் பார்ட்டி மண்ணைக்கவ்வும் விஷயங்களில் கூட  வானளாவ ராக்கெட் விடும்போது ரசிக்கவைக்கிறார்.

இவர் பஸ்ஸில் வரும் பெண்களை மடக்க மேற்கொள்ளும்  அதிகப்பட்ச சாகஸமே ஃபுட்போர்டு அடிப்பதுதான். அதனையே  குலத்தொழில் போல செய்து வருகிறார்.

அதிலும் சில பல இடர்கள்.  திலும் வந்து சிக்குகிறார் உருட்டும் விழிகளுடன், தாவணியில், இயல்பான அவசியமான அழகுடன் பள்ளி மாணவி பூர்ணிமா.
பூரணியிடம் காதலை இன்றாவது சொல்லிவிடுவேன் என்று கிளம்பி பக்கதில் சென்றதும் அவள் ’அண்ணா’ என்று அழைக்க,  வெறுத்துப்போய் நிற்பவன் கொஞ்சம் வினாடிகளிலே டேக் இட் ஈஸி என கிளம்பியவுடன் அடுத்து தன்னை லுக்கு விடும் பெண்ணை டார்கெட் செய்ய..  மனசாட்சி மணியடிக்கிறது. அதனால் வாலண்டியராக சோகத்தை வரவழைக்க முயற்சி செய்து, தோற்றுப்போய், சிரித்து,  நான் ’இப்படி’த்தான் என நம்மிடம் சொல்லிவிடுகிறான்.

படத்திற்கு ஏன்  ’அட்டகத்தி’  என யோசிப்பவர்களுக்கு இயக்குனர் வைத்திருக்கும் ஒரு மொக்கையான காரணத்தை உங்களிடம் சொல்லி சுவாரஸ்யத்தை குலைக்க விரும்பவில்லை.

அதன் பின் ஒரே போல் உடையணிந்து வேலைக்கு செல்லும்  நதியா திவ்யாக்களை தன் அடுத்த வலைவீச்சில் இழுத்துபோட கிளம்புகிறார். அவர்களில் ஒருவரை மனமார(ற) தேர்வுசெய்து அவர்கள் ஊரிலேயே சொல்லப்போய் அடிவாங்கி பிழைத்து ஓடி வருகிறார். அப்படிஓடி வரும் வேகத்திலேயே உள்ளூர் கராத்தே மாஸ்டரிடம் சேர்ந்து  அவரிடம் பயிற்சி எடுக்கும் காட்சி அதகளம்.  அப்புறம் அங்கிருந்தும் பேக் அப். 

கடைசியில் ஒருவழியாக இருந்த ஒரு ஆங்கிலத்தை பாஸ் செய்து கல்லூரியில் சேர்ந்து ரூட்டு தல ஆகிறார்.

அங்கே மீண்டும் பூர்ணிமாவே வந்து நிற்க அதிர்ச்சி, சந்தொஷம், ஆச்சர்யம்.  நமக்கும்தான். அப்புறம்  அவருக்கும் பூர்ணிமாவுக்கும் காதல் வந்ததா இல்லையா என்பது மீதிப்படம். 


நாயகனின் அப்பா, அம்மா, அண்ணன் நண்பர்கள் என அனத்துக் பாத்திரங்களும் யதார்த்ததை வழியச்சுமந்து இருக்கின்றன. அளவு, அழகு.

இயக்குனர் யாரும் எதிர்பாராத விஷயங்களையே காட்சிகோர்வையாக வைக்கவேண்டுமென மெனக்கெட்டு அமைத்திருப்பார் போல.  படம் முன்பாதி ஜெட்டு போல் கிளம்பி  ஏரோப்ளேனாக மாறி கடைசியில் நம் பொறுமையை சோதித்து கட்டைவண்டியாக வந்து சேர்கிறது.

புனைவுகளும், சினிமாத்தனமும் இல்லாத அருமையான உணர்ச்சி பதிவுகள்,  விடலைக்காதல், எல்லாவற்றையும் அழகாய் சொன்ன இயக்குனர் கதைய ட்விஸ்ட்டு பண்ணுகிறேன் பேர்வழி என ஹீரோவை

ஒருதலையாக காதலிக்கும் பெண்ணை அயிட்டம் ரேஞ்சுக்கு உரசவிட்டு.. (அயிட்டமே இப்படி ஓசியில் உரசுமா? என அனுபவசாலிகள் பின்னூட்டம் போட்டா தேவலாம்..) குழப்பியடித்து மட்டுமல்லாது
அதன் பின்னான காட்சிக்கோர்வைகளை காற்றில்  விட்டுவிட்டார்.

கல்யாணமாகி இன்று ஓரிரு குழந்தைகளுக்கு அப்பனாகியிருக்கும் ஆளா நீங்கள்.. அப்படியென்றால் இந்த ஹீரொவின் செயல்களின் சாயல் உங்களிடம் கொஞ்சமேனும் இருக்கும்.

தலைப்புக்கு நியாயம் செய்தாலும், கிளைமாக்ஸை இன்னும் கவனமாக செதுக்கியிருந்தால் ஒரு சூப்பர் ’சூரிக்கத்தி’ கிடைத்திருக்கும்.

பின்னணி இசை ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். (கம்ப்யூட்டரில் இசைக்கும் காலத்திலும் பின்னணி இசை என்பது சரிதானா? ).  'ஆசை ஒர் புல்வெளி , 'ஆடி போனா ஆவணி' பாடல்கள் நன்று.  நடுக்கடலிலே.. கானா தாளம் போடவைக்கும்.

தாராளமாய் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.. ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது .

1 comment:

  1. Review is good sir. But Same time u r not touching Director Touch. I Like your Honest...

    ReplyDelete