கதை, திரைக்கதை,இயக்கம்: அமீர் தயாரிப்பு: அன்பழகன் (விரைவில் இவரை தெருவோரங்களில் பார்க்கலாம்) ஒட்டி/வெட்டியவர்: அஹ்மத் ஒளிப்பதிவு: தேவராஜ்.
ஆதிபகவன்..
பருத்திவீரனுக்கு (2007) பின்னர் வரும் அமீரின் படம் என்பதால் பெருத்த
எதிர்பார்ப்புடன் கோவை சாந்தி தியேட்டருக்கு சரணாகதி புகுந்தோம்.
இந்த
தியேட்டரில் சவுண்டு மற்றும் ப்ரொஜெக்ஷன் முன்னைவிட சிறப்பாக
இருந்தாலும்.. தியேட்டர் நிர்வாகம் படு திராபை. தியேட்டர் ஊழியர் ஒருவர்,
படம் போட்டு முக்கால் மணி நேரம் வரை தாமதமாக வருவோருக்கெல்லாம் சீட்டு வரை
வழிகாட்டிக்கொண்டிருந்தார்.. அதில் இம்சை என்னவென்றால் அவர் அந்த முக்கால்
மணி நேரமும் கையில் வைத்திருந்த டார்ச்சால் சுழற்றி சுழற்றி நம்
முகத்தில் அடித்து ’டார்ச்’சர் பண்ணிட்டாரு..
’ஜெயம்’ரவி
என்கிற ’ஆதி’ இந்தியாவில் ஒரு பெரும் ஆந்திர கிரானைட் பார்ட்டியிடம் அவர்
வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் கறுப்பு, மஞ்சள் (கோல்டுதேன்..) பணத்தை
சிபிஐ போர்வையை வைத்து சுருட்டி கிளப்பிச்செல்கிறார். எங்கே??
தாய்லாந்திற்கு.. இங்கு வரலாறு புரிந்துக்கொள்ளப் படவேண்டுமானால்..
ஃப்ளாஷ்பேக்கில் ஜெயம் ரவியின் அப்பா தப்பான தொழில் செய்தவராதலால் அவர்
அம்மா சுதாச்சந்திரன் தன் மகன் ரவியையும் மகளையும் கூப்பிட்டு வறிய
நிலையில்(?!*#) பட்டாயாவில் சோர்ந்து போய் சேர்கிறார். அப்புறம் Jeyam Ravi மூன்று
காட்சிகளில் மாஃபியா பிஸினஸில் கொடியில்லாமல் பறக்கிறார்.
சரக்கடிக்கப் போகிற பாரில் அரைவேக்காட்டு ஃபிகர் நீதுமேல் பரிதாபப்படுறார்.
சில நாட்களுக்கு பின்னர் வேறு ஒரு இடத்தில் அவள் தன் பாஸிடம் அடிவாங்கி
துன்புறு’வதை’ காணப்பொறுக்காமல் விலைக்கு வாங்கியும் வருகிறார் . பிறகு
ஒரு ஆக்ஷன் சீக்வென்ஸில் ஜெயம் ரவியை அவர் காப்பாற்ற நீதுவின் மேல் காதல்
வருகிறது. நீதுவும் எங்கப்பாவை பாக்க இந்தியாவுக்கு போலாம்’ என்றவுடன் முந்தானையை
பிடித்துக் கொண்டே வந்து இந்தியாவில் வகையாக மாட்டிக்கொள்கிறார். நீது
அவரை ஏன் மயக்கி இந்தியாவிற்கு அழைத்து வந்தார்?? மீண்டும் ஒரிஜினலாக
மயக்கி (மயக்க மருந்துதேன்.. ) ஏன் மாட்டிவிட்டார் என்பது பின்’பேதி’க்
கதை.
முன்பாதி
இதே தியேட்டரில் ‘ஓடிய’ சமர்’ஐ நினைவு’படுத்தியது’.. என்ன.. அங்க விஷாலு
ஏன் எதுக்குன்னு கேக்காம ஹீரோயின் கூப்பிட்டான்னு தாய்லாந்து போனாரு..
இங்க அது உல்டா.. திருநங்கையாக இரண்டாவது வேடத்தில் வரும் ஜெயம் ரவி
(பகவான்) பார்க்கும் பெண்களை உஷார் பண்ணும் ’கில்மா கிங்’காக இருப்பது என்ன
வகையான சமாச்சாரமோ?? அமீருக்கே வெளிச்சம். பகவானாக பல இடங்களில் நன்றாக
நடித்திருந்தாலும்.. சில இடங்களில் எரிச்சல் வருவது தவிர்க்க
முடியவில்லை, அதிலும் பகவானை குறிப்பிடும்போதெல்லாம் எல்லா கேரக்டர்களும்
இந்த பகவான் இல்லை அந்த 'பகவான்' என மேலே கையைக் காட்டி நம்மையும் மேலே அனுப்பும்
முயற்சியில் இறக்குகின்றன.
ஒளிப்பதிவு
தேவராஜ். சிறப்பாகவே செய்திருக்கிறார் . ஸ்டெடிகேம் /ஃபைட் எபிஸொட்களில்
சுழற்றி விளையாடி இருக்கிறார். இருப்பினும் இன்னும் ஃப்ரேமிங்கில் சிரத்தை
எடுக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
பாடல்கள்
சோபிக்கவில்லை.பிண்ணனி இசை சுமார்தான். யுவன் முன்பாதியில் பிண்ணனிக்கு
பல இடங்களில் ஃபீமேல் கோரஸில் நம் குரல்வளையை நெரிக்கிறார்.
இரண்டு வருஷமா
இதத்தான் எடுத்தாரா அமீர்?. சலிப்பை உண்டாக்கும் டயலாக் டெலிவரி படத்தில்
இருந்து நமது கவனத்தை அக்கம் பக்கம் திருப்புவதில் லேசான கழுத்து வலி வரும்
அபாயம் தெரிகிறது.
சென்ற முறை சுப்பிரமணிய சிவாவை வைத்து இயக்கி ’ட்ஸோல்ஸி’யை ’யோகி’ யாக
உருமாற்றிய வித்தையையே அமீர் மீண்டும் கையாண்டிருக்கலாம்.
மோசமான திரைக்கதை மற்றும் ஆக்கம் இந்த பகவானை பக்கவாதத்தில் படுக்கப்போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை..
படத்தை பார்க்கும் எண்ணம் இந்நேரம் உங்களுக்கு அற்று போயிருந்தால் அதுவே ஆதிபகவனின் வெற்றி!!
விகடனார் 39-40 மதிப்பெண்கள் கொடுத்து இது போன்ற இயக்குனர்களை ஆறுதல்செய்வார் என நம்புகிறேன்..
நன்றி..
உங்கள் கமெண்ட்டுகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்..
கணேஷ் நாராயணஸ்வாமி.
தயாரிப்பு: அன்பழகன் (விரைவில் இவரை தெருவோரங்களில் பார்க்கலாம்) LOL :D :D :D
ReplyDeleteநீங்கள் சிரமப்பட்டு விளக்கியிருந்தாலும் கதை புரியவேயில்லை. பாவம் நீங்கள், ஏசுநாதர் போல் எங்களுக்காக சிலுவையை சுமந்து எங்களை ரட்சித்துள்ளீர். நன்றி!
ReplyDeleteamas32
அந்த கொடுமைய என் வாயால எப்படி சொல்வேன்... ;))
Deleteஎப்படியோ என்னை காப்பாற்றி விட்டாய் மானுடா! ஹரிதாஸ் சினிமா எப்போது!
ReplyDelete